Milky Mushroom Farm
பால் காளான்’ வளர்
பால் காளான் உற்பத்தி செய்வதற்கு நிலத்தில் குழி எடுக்க வேண்டும். அகலம் 10 அடி, ஆழம் 2 அடி, நீளம் 3 அடி. (சுமார் 1 அடி ஆழத்திற்கு குழி எடுத்த மண்ணை மேல் மட்டத்தில் பயன்படுத்தி 1 அடி உயரத்தை ஏற்றிக் கொள்ளலாம்)
மணல் (குப்பை மண்/வயல் மண்), கொஞ்சம் கிளிஞ்சல் பவுடர் (Calcium carbonate) மற்றும் வேக வைக்காத சுண்ணாம்பு இவை அனைத்தையம் தண்ணீர் கலந்து வேக வைக்க வேண்டும் ( 1 மணி நேரம் வரை – உருண்டைப் பதம் வரும் வரை மட்டும்) வேக வைக்கும் பக்குவத்தினை குக்கரில் மேற் கொள்ள வேண்டும், சூடு ஆறிய பின்பே அடுத்த தொழில நுட்ப முறைக்குச் செல்ல வேண்டும்.சிப்பிக் காளானைப் போல் பால காளான் பெட் ஓரங்களில் வளர்வதில்லை ஆகவே 1 பெட்டை 2 கூறுகளாகப் பிரித்து (அறுத்து) குழிக்குள் வைத்து வளர்க்க வேண்டும்.குழிக்குள் காளான் உற்பத்தி நடைபெறுவதால் நேரடி வெயில் படுவதை தவிர்க்க, பொய்ப் பந்தல் ஒன்று அமைக்க வேண்டும். இதனை சீட் (Silpaulin Carbonate) பயன்படுத்தி குழிக்கு நிழல் அமைக்க வேண்டும். தண்ணீர் தெளிப்பதற்கு ஸ்பிரிங்குலர் பயன்படுத்தலாம்.பால் காளான் சுமார் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.. மேலும் இதில் சிறிதளவு மாட்டுக்கறி வாடை வருவதால் தமிழ்நாட்டில் விற்பனை வாய்ப்பு, குறைவாகவே உள்ளது.கேரள மாழலத்தில் தேவையும், விற்பனை வாய்ப்பும் அதிகமாக உள்ளன. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பால் காளான் வகைகள் கேரளச் சந்தையில் அதிகம் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
செட் (உற்பத்திக் கூடம்) சுத்தம் செய்யும் முறை தேவைப்படும் பொருட்கள்
தண்ணீர் 1 லிட்டர், காதி சோப் (ஒட்டும் திரவமாக) வேப்பெண்ணெய் 1 லிட்டர் கலக்க வேண்டும்.மேற்கூறிய அனைத்தும் ஒன்றாகக் கலந்து ஸ்பிரே செய்ய வேண்டும் (ஒவ்வொரு முறை காளான் அறுவடை முடிந்த பின்பு மட்டுமே சுத்தம் செய்தல் வேண்டும்).
கூடுதல் தகவல்:
காளான் உற்பத்திக்கு பெட் அமைக்கும் பொழுது வைக்கோலைச் சிறிது சிறிதாக வெட்டினால் மிகவும் எளிமையாக பெட் அமைத்துவிடலாம். அதே போல் பூஞ்சாணம் வேகமாக வளரவும் இது உதவும்.காளான் அறுவடை முடிந்த பின்பு கழிவுகளை மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம். காளான் உற்பத்தியின் போது பெட் அமைத்து 20 நாட்கள் முடிந்த பின்னரே பெட்டின் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தமிழகத்தின் சீதோண நிலை, வெப்ப, தட்ப நிலை போன்றவைகளை அறிந்துக் கொள்ள பட்டுப்புழு வளர்ப்பு (Sericulture Department) துறையை அணுகலாம்.
1. ஆடி மாதம் இறுதி முதல மாசி 15 ம் தேதி வரை சிப்பி
காளான் வளர்வதற்கு சிறந்த பருவம்.
2. மாசி மாதம் முதல் பால் காளான் சிறப்பாக வளரும்.
3. சிப்பிக் காளான் வளர்வதற்கான சீதோஷ்ண நிலை 20-30
4. பால் காளான் வளர்வதற்கான சீதோஷ்ண நிலை 30-40
5. பட்டன் காளான் வளர்வதற்கான சீதோஷ்ண நிலை
15-20
ஒரு பெட்டின் எடை சுமார் 2.75 கிலோவுக்கு குறையாமலும் 3 கிலோவுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.ஒரு பெட்டில் காளான் அறுவடை சுமார் 1டி கிலோ வரை இருக்கும் (விதைத் தன்மை / வீரியம் மற்றும் வைக்கோலின் தரம் போன்றவைகள் இதில் அடங்கும்). இடைத்தரகர்கள் யாருமின்றி உற்பத்தியாளரே சில்லரை வணிகத்தில் ஈடுபடுவது இலாபம் அளிக்கும்.
எச்சரிக்கை
ஆஸ்துமா, மூச்சு (சுவாச) பிரச்சனை உள்ளவர்கள் காளான் உற்பத்தித் தொழிலை தொடங்க வேண்டாம். அங்கக வேளாண்மை (Organic farming) செய்யும் பண்ணைகளில் காளான் உற்பத்தி செய்ய முடியாது காரணம் டிரைக்கோடெர்மாவிரிடி, சூடோமோனாஸ் போன்றவைகள் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் – இவை அனைத்தும் பூஞ்சைக் கொல்லிகள் – காளான் என்பது ஒரு வகை பூஞ்சை ஆகும்.
தூங்கும் இடத்திலோ அல்லது வீட்டிற்குள்ளோ காளான் உற்பத்தி செய்யக் கூடாது மனிதர்களைப் போல் மூச்சுக் காற்றை சுவாசித்து கரி அமில வாயுவை வெளியேற்றும்.
காளான் வளர்ப்பை வீட்டின் மொட்டை மாடியில் முயற்சி செய்ய வேண்டாம், முதல் மூன்று மாதம் மட்டுமே நன்கு வளரும் பின்பு வளராது காரணம் காற்று அடிக்கும் பொழுது ஈரப்பதம் போய்விடும்.துருப்பிடித்த கத்தியில் (பெட் அமைக்கும் போது) ஓட்டை போடக் கூடாது.
No comments:
Post a Comment